கோவை: கோவையில் இளம் பெண்ணை நிர்வாணப் படுத்தி நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் இளம் பெண்ணை நிர்வாணப் படுத்தி நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை வடவள்ளி காமதேனு நகர் பகுதியில் வசித்து வருபவர் கமலா (51). இவரது மகள் சரண்யா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் மகளிர் குழுவ உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், பழைய இரு சக்கர வாகனம் வாங்க பணம் தேவைப்படுவதாகச் தாயிடம் சரண்யா 10,000 ரூபாய் கேட்டு உள்ளார். பணம் பெற்று கொள்ள சம்மதித்த நிலையில், தனக்கு தெரிந்த ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வரும் 37 வயதுடைய நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ன்பவரை வாகனம் வாங்குவது தொடர்பாக வர சொல்லி அழைத்துள்ளார்.
மதியம் இரண்டு மணி அளவில் நவீன் கமலாவின் வீட்டிற்கு வந்தபோது, அவர் பின்னாலேயே முகமூடி அணிந்த நிலையில் வீட்டின் உள்ளே நுழைந்த ஐந்து நபர்கள் கதவை பூட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
நவீன், கமலா, சரண்யா ஆகியோரிடம் இருந்து பன்னிரெண்டரை பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் எட்டாயிரம் ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் சரண்யா மற்றும் நவீனை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து உள்ளனர்.
இது குறித்து யாரிடம் சொல்லக் கூடாது என மிரட்டியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து நவீன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தப்பிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.