கோவை: கோவையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்டவரை கத்தியை காட்டி மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்டவரை கத்தியை காட்டி மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சூர்யபிரகாஷ்(23). இதே பகுதி ராமமூர்த்தி சாலை பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ராகுல்ராஜ்(19), முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகனின் மகன் சபரீஷ்(21) ஆகிய மூவரும் நண்பர்கள்.
இவர்கள் மூவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு தங்களது இரு சக்கர வாகனங்களில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் நாச்சிமுத்து(33) தனது நண்பர் சரத்துடன் சென்று சூர்யபிரகாஷை எச்சரித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவிக்க மூவரும் நாச்சிமுத்துவிடம் வாக்குவாதம் செய்த நிலையில் சூர்யபிரகாஷின் நண்பரான சபரீஷ் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.