கோவை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர் பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவை இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 50 நாட்களுக்கும் மேலாக விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விசைத்தறிகள் இயங்காத காரணமாக வருமானம் இன்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் காரணமாக வட மாநிலங்களுக்கு உற்பத்தி செய்த ஜவுளி துணிகளை அனுப்ப முடியாத சூழல் உள்ளதாகவும் மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது போல விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மின்சார கட்டணத்தை ரத்து செய்தது போல் இங்குள்ள சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.