தமிழகத்தில் உள்ள கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்க, வரும் 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகத்தில் உள்ள கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்க, வரும் 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-




தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் உள்ள நிலையில் பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோவில்களில் கூட்டம் வருவது குறைவான ஒன்று எனவும் சில கோவில்கள் தனியார் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கிராம கோவில்களில் வரக்கூடிய கூட்டம் குறைவாக தான் இருக்கும் என்பதால் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட வழிமுறைகளை பின்பற்றி அரசு அதிகாரம் வழங்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவும் இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

மேலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் வரும் 26ம் தேதி அனைத்து கோவில் வாசல்களிலும் கற்பூரம் ஏற்றி தோப்புகரணம் போட்டு வழிபாடு போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...