கோவை: பணி நேரத்தை அதிகரிக்க கூடாது, பொது திறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பணி நேரத்தை அதிகரிக்க கூடாது, பொது திறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கை பதாகைகளை கழுத்தில் அணிந்தபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாவட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் கூறுகையில், நிதியமைச்சர் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விடுவதாக அறிவித்துள்ளார். இதனால் துறைகள் அரசிடம் இருந்தாலும் அதிகாரம் தனியாரிடம் இருக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி முதலாளிகள் அனைவரும் சேர்ந்து வேலையாட்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் ஆக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசு ஏற்கக்கொள்ள கூடாது என்றவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், அவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.7,500 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருவதாக கூறினார்.
தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் என்பது தொழிற்சங்க அமைப்பினால் முடிவு எடுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் நடைபெறும் என தெரிவித்தார்.