கோவை: கோவையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு நகைகளை கொடுத்தது குறித்து கேட்டதால் மனமுடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு நகைகளை கொடுத்தது குறித்து கேட்டதால் மனமுடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மனைவி வனிதா(33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், வனிதா அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தனது நகைகளை கணவர் மற்றும் குடும்ப உறவுகளுக்கு தெரியாமல் கொடுத்தாக கூறப்படுகிறது.
இது குறித்து கேட்டதால் மனமுடைந்த வனிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்து நர்மதாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.