கோவை: கோவையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தாலி கொடியை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தாலி கொடியை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி வரதராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வின் டேவிட் என்பவரது மனைவி மங்கயர்கரசி(53). நேற்று இவர் கடை முன் நின்று கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களில் ஒருவர் மங்கயர்கரசி கழுத்தில் இருந்த 13 சவரன் தாலி கொடியை பறித்து விட்டு தப்பியோடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவிக்காக சத்தம் போட்டுள்ளார். ஆனால் அருகில் இருப்பவர்கள் வரும் முன் திருடர்கள் மின்னல் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
பின்னர் இது குறித்து மங்கயர்கரசி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.