கோவை ராமநாதபுரம் காவல் எல்லையில் கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற உழைத்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு..!

கோவை: கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற உழைத்த கோவை ராமநாதபுரம் காவலர்களுக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை: கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற உழைத்த கோவை ராமநாதபுரம் காவலர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி என பல துறைகள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் கோவை ராமநாதபுரம் காவல் எல்லையில் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் பல்வேறு நூதன விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் இந்த பகுதியில் நோய் பரவல் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இங்கு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த நபர்களின் 552 இருசக்கர வாகனமும், 12-மூன்று சக்கர வாகனமும், 10 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சமூக ஆர்வலர்கள் துணையுடன் ஏழை எளியோர் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.



இப்படி நடைபெற்ற தொடர் நடவடிக்கையால் ராமநாதபுரம் காவல் எல்லை நோய்த்தொற்று இல்லாத பகுதியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் முருகேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதேபோல, இரவு பகல் பாராமல் உழைத்த காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கோவையில் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தால் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்த அனைத்து தடுப்புகளும் (கண்டைன்மெண்ட் ஜோன்) நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொதுமக்களில் ஒருவரான மாரிமுத்து கூறும்போது;-

கொரோனோ நோய்த்தொற்று பரவாமல் இருக்க ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதேபோல போலீசார் தினமும் ஒரு நாளைக்கு 500 பேருக்கு முக கவசம் வழங்கினர். மேலும் ராமநாதபுரம் 80அடி ரோட்டில் வசித்து வரும் வட மாநில தொழிலாளர்கள் , தர்மபுரி கட்டடத் தொழிலாளர்கள் என ஏழை எளியோருக்கு ராமநாதபுரம் காவல் நிலையம் சார்பில் தினமும் ஆயிரம் உணவுகள் வழங்கப்பட்டது. அதேபோல வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் தனிமனித இடைவெளியுடன் நடைபெற்றது. அதேபோல முதியோர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எல்லை முழுவதும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது .தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் இந்த எல்லையில் நோய் தொற்று பாதிப்பு இல்லை. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருவதால் காவல் ஆய்வாளரையும், அந்த காவலர்களையும் ராமநாதபுரம் எல்லை சார்பாக வாழ்த்துயுள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...