திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நீதிபதி மூலம் வழங்கப்பட்டது
திருப்பூர்: திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நீதிபதி மூலம் வழங்கப்பட்டது.
கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ந்- தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே நீதிமன்றங்களும் இயங்காமல் இருப்பதால், வழக்கறிஞர்கள் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்வு திருப்பூர் லட்சுமிநகர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், திருப்பூர் பார் அசோசியேஷன் மற்றும் திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மற்றும் பல்லடத்தை சேர்ந்த 95 வழக்கறிஞர்கள் உட்பட 131 வழக்கறிஞர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா 4 ஆயிரத்திற்க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வழங்கினார்.
இதில் பார் கவுன்சில், பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்