உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு; குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு; குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!


நீலகிரி: உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் பாம்பே கேசில் பகுதியில் வசித்து வருபவர் முருகன், கீதா தம்பதியினர், இவர்களது மகள் மாயா (21) பிரசவத்திற்காக நேற்றைய முன் தினம் உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்றைய தினம், மாயாவிற்கு பிரசவம் ஆன நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார், இது அப்பெண்ணின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதையடுத்து இன்று மருத்துவமனையை முற்றுகையிட்ட அப்பெண்ணின் உறவினர்கள், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்துள்ளார், எனவே பிரசவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனையை மூட வேண்டுமென கூறி மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.



இதனால், மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும், குழந்தை நலமுடன் இருக்கும் நிலையில் முதல் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...