ஊரடங்கு உத்தரவை மீறி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு பூட்டு.
நீலகிரி: ஊரடங்கு உத்தரவை மீறி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு பூட்டு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் பகுதியில் இயங்கி வரும் ஆண்டனிஸ் மெட்ரிக்குலேசன் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
இப்பள்ளியில் புதிதாக சேர உள்ள மாணவர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து, என்று அப்பள்ளிக்கு திடீரென சென்ற அதிகாரிகள் உள்ளே ஆய்வு செய்தபோது நான்காம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கிருந்த ஆசிரியர்களை எச்சரித்த அதிகாரிகள் பள்ளி அனைவரையும் வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துக்கொண்டு அலுவலகங்களுக்கு திரும்பினர்.