திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக கவசத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக கவசத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு வருகின்றனர்.
மாஸ்க் அணிவதால் அவர்களுக்கு இடையூறு இருப்பதை உணர்ந்து தற்போது அவர்களுக்கான பிரத்யேக முக கவசங்களை தயாரித்து திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பிரத்தியேக முக கவசங்கள் வழங்கப்பட்டன.