கோவை: கோவையில் கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது லாரி மோதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டின் முன் அமர்ந்திருந்த உரிமையாளர் உயிர் தப்பினார்.
கோவை: கோவையில் கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது லாரி மோதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டின் முன் அமர்ந்திருந்த உரிமையாளர் உயிர் தப்பினார்.
கோவை அடுத்த கணுவாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை நாகராஜ் தன் வீட்டில் முன் அமர்ந்திருக்கும் போது அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த லாரி இயந்திர கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது.
இந்த நிலையில், தாறுமாறாக ஓடிய லாரி நாகராஜின் வீட்டின் முன் புற சுவரில் மோதியதில் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த நாகராஜ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
லாரியின் ஓட்டுநர் மற்றும் அதில் வந்த வேலையாட்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பழுதடைந்த நிலையில் இருந்த லாரியில் இருந்த செங்கற்களை மற்றொரு லாரிக்கு மாற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.