கோவையில் மணிப்பூர் பெண்களை, சீனாவை சேர்ந்தவர்கள் என்று நினைத்து 'கொரோனா அண்ட் கோ' என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது

கோவையில் மணிப்பூர் பெண்களை, சீனாவை சேர்ந்தவர்கள் என்று நினைத்து 'கொரோனா அண்ட் கோ' என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது

கோவை: கோவையில் மணிப்பூர் பெண்களை, சீனாவை சேர்ந்தவர்கள் என்று நினைத்து 'கொரோனா அண்ட் கோ' என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது .

மதுபோதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்பாபா காலனி காவல்துறையினர் இன்று அவரை கைது செய்தனர்.

கோவை அழகேசன் சாலையில் இரவு அறைக்கு திரும்பி கொண்டிருந்தமணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஜென்னி (21), மரியா (23) ஆகிய இளம்பெண்கள் இருவரை மறித்து சீனா நாட்டை சேர்ந்தவர்களா எனக்கூறி, அவர்களை கொரோனா அண்ட் கோ' என கூறி தகராறில் ஈடுபட்டதாக போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விக்னேஷ் (26) என்பவரை சாய்பாபா காலனி காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் மேகாலாயா, மணிப்பூர், அஸ்ஸாம் உட்பட பல்வேறு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக சாய்பாபா காலனி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மணிப்பூர், மேகாலாயா மாநிலங்களை சேர்ந்த பெண்களிடம்அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

வடமாநில பெண்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன் தள்ளிவிட்டுள்ளனர்.

இதுகுறித்துஇன்று வடமாநில பெண்கள் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

மேலும், இந்த புகாரில் கொரோனா பரவுகின்றது என கூறி,

"கொரோனா அண்ட் கோ" எனஅவர்களை கேலியாக பேசுவதாகவும், தகாத வார்த்தையில்திட்டுவதுடன் தள்ளிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தகராறு செய்த வாலிபரின்வீடியோவையும் வடமாநில பெண்கள் சாய்பாபா காலனி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த இளைஞர்கள் குறித்துவிசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...