கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் தவணைகளை செலுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் தவணைகளை செலுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் மோட்டார் வாகன பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வருவதால், வாகனங்களின் தவணைகளை செலுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத சூழலில் சாலை வரி, தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனுக்கு ஆறு மாதம் விலக்கு அளித்து வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.