வாகனங்களின்‌ தவணைகளை செலுத்த மேலும்‌ 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின்‌ தவணைகளை செலுத்த மேலும்‌ 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின்‌ தவணைகளை செலுத்த மேலும்‌ 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் மோட்டார் வாகன பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



இந்த நிலையில், ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வருவதால், வாகனங்களின்‌ தவணைகளை செலுத்த மேலும்‌ 3 மாத காலம் அவகாசம் கோரி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத சூழலில் சாலை வரி, தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனுக்கு ஆறு மாதம் விலக்கு அளித்து வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...