கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் தற்போது எந்த விதமான கட்டுப்பாட்டு பகுதிகளும் இல்லை எனவும் 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே 23 கட்டுப்பகுதிகளில் தளர்வு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீதமிருந்த 3 கட்டுப்பாட்டு பகுதிகளும் தளர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் ஒரு கொரொனா பாதிப்பு நோயாளியும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கோவையில் 146 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 14 நாட்களாக மாவட்டத்தில் எந்தவொரு புதிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தொடர்ந்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவையில் மாவட்டத்தில் மத்திய குழு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா சமூக பரவல் குறித்து பொதுமக்களிடம் பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து வருகின்றனர். மேலும், விரைவில் மத்திய அரசு கோவை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அறிவிக்கும் என்றார். தற்போது கோவை ஆரஞ்சு மண்டலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.