திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி - போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் - கொடிகம்பம் பகுதியில் டாடா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் இரண்டு பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.



இந்த நிலையில், இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்த போது அதில் ஒரு இயந்திரம் கம்பியை கொண்டு உடைக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. ஆனால் பணம் எதுவும் திருடு போகவில்லை. மேலும் அருகில் இருந்த ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது. போலீசார் அங்கும் ஆய்வு செய்தனர். அதில் எதுவும் கொள்ளை முயற்சி நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.

ஏடிஎம் மையங்கள் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் மதுபோதையில் மர்மநபர்கள் எதுவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...