கூடலூர் நகரை ஒட்டிய பகுதிகளில் நடமாடும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்..!

நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா ஏழு முறம் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நேரத்தில் வந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா ஏழு முறம் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நேரத்தில் வந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



காலை 7 மணியளவில் வந்த இந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டிய போது குடியிருப்பு பகுதிகளை ஒட்டி ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த தினேஷ் என்பவரது கார் ஒன்றையும் யானை லேசாக சேதப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக இடது பின்புற பகுதியில் காயத்துடன் திரியும் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ள நிலையில், தற்போது கடந்த சில மாத காலமாக இப்பகுதிகளை ஒட்டி நடமாடி வருகின்றது. அதிகாலை நேரங்களில் அவ்வப்போது வரும் இந்த யானையால் இப்பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், காலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் சிலர் யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர். அடிக்கடி ஊருக்குள் வந்து பழகிவிட்ட இந்த காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக இந்த யானைபை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அல்லது மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...