கோவையில் மதுக்கடை திறப்பதற்கு முன்பே டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள்..!

கோவை: கோவையில் மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று மது வாங்கி செல்ல போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.


கோவை: கோவையில் மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று மது வாங்கி செல்ல போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.



கோவை சவுரிபாளையம் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப் பிரியர்கள் டோக்கன் பெற்ற மகிழ்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்.

காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன் மதுப் பிரியர்கள் கைநிறைய மது வகைகளை அள்ளி மகிழ்ச்சியுடன் சென்றனர். சவுரிபாளையம் கடை முன்பு ஒரு சிலர் கடை முன்பு விழுந்து வணங்கியும், மது பாட்டில்களை வாங்கி முத்தம் கொடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், ஒரு சிலர் மது வாங்க நீண்ட வரிசையில் நிற்பது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிய கூடாது என்பதற்காக முக கவசம் அணிந்தும், தலையில் கேரிபேக் வைத்து மறைத்து கொண்டு வரிசையில் நின்று மது வகைகளை வாங்கி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த முறை 207 மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 76 மதுபான கடைகள் சேர்த்து 283 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் கடைகள் திறக்கப்பட்டதால் நகர் பகுதி கடைகளில் கூட்டம் குறைவாகவும் புறநகர் பகுதிகளில் கூட்டம் அதிகமாகவும் காணப்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...