கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து அனைத்தும் இயக்க தமிழக அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்காத காரணமாக இதை நம்பி வாழும் பெரும்பாலான குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் வரும் 18ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் கூறுகையில், ஆட்டோக்கள் இயக்க இதுவரை ஐந்து முறை மனு அளிக்கப்பட்டு உள்ளது எனவும் எங்களது கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும் என்றார்.

மேலும், இந்த தொழிலை நம்பி கோவை மாவட்டத்தில் 15,000 மேற்பட்டோர் உள்ளதாக தெரிவித்த அவர், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 300 பேருக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்க பெற்று உள்ளதாகவும் அதுவும் முழுமையாக கிடைக்க பெறவில்லை என்று கூறினார்.

எனவே, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் எனவும் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே பேட்ஜ் வழங்கப்படுவதால் எழுபது சதவீத ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேட்ஜ் இல்லாத காரணத்தால் நலவாரியத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...