மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உதவி இயக்குநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உதவி இயக்குநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக ரஜினி நடித்த எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்களுக்கு இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அருண்பிரசாத் வந்துள்ளார். அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையம்பாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுபாட்டினை இழந்த இருசக்கர வாகனம், நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அருண்பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் அருண்பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக ரஜினி நடித்த எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்களுக்கு இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அருண்பிரசாத் வந்துள்ளார். அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையம்பாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுபாட்டினை இழந்த இருசக்கர வாகனம், நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருண்பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் அருண்பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.