நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் தேயிலை, காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், குழந்தையை மீட்ட காவல் துறையினர் உதகை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.