கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீசார் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரு காவல் நிலையங்களும் மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த இரு காவல் நிலையங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. தற்காலிகமாக மாற்றப்பட்டு இருந்த போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர். புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்தி பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.