கோவை: தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரி கோவை கோபாலபுரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரி கோவை கோபாலபுரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை கோபாலபுரம் பகுதியில் திராவிடத் தமிழர் கட்சி, திவிக, தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் முககவசம் அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும், தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித்துகள் மீது 40க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பங்கள் நடைபெற்றுள்ளதாகவும் சாதி ஆணவத்தோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஜெய ஸ்ரீ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கொலைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.