குன்னூரில் துப்புரவு ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீலகிரி: திருத்துறைப் பூண்டி துப்புரவு ஆய்வாளர் வெங்கடாசலம் பணியின் போது, பா.ம.க கட்சி பிரமுகர் கல்விப்பிரியன் என்பவரால் அரிவாளால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: திருத்துறைப் பூண்டி துப்புரவு ஆய்வாளர் வெங்கடாசலம் பணியின் போது, பா.ம.க கட்சி பிரமுகர் கல்விப்பிரியன் என்பவரால் அரிவாளால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப் பூண்டி துப்புரவு ஆய்வாளராக பணியில் இருப்பவர் வெங்கடாசலம். இவர் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் தங்களது பணியாளர்களுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பா.ம.க கட்சி பிரமுகருடன் ஏற்பட்ட பிரச்சினையில் அரிவாளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து குன்னூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் மால் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக முதல் அமைச்சருக்கு புகார் மனு அளித்துள்ளதாகவும் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...