கோவை: மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை உள்ளதாகவும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் மனு அளித்தனர்.
கோவை: மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை உள்ளதாகவும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவில் மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய கொள்கையை மத்திய அரசே வகுக்கும் என கூறப்படுகிறது. இதனால் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் எல்லாம் இனிமேல் மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடுத்தர மக்களுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும், குடிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள இலவச மின் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்ற வகையில் மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையத்தின் மூலம் தீர்வு காணப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிகார போக்கினை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கிறோம்.
விவசாயம் நசிந்து வரும் நிலையிலும், இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமானால் இந்தியாவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்துவார்கள், வாழ்வாதாரம் உரிமைகள் பாதிக்கப்படும்.
எனவே புதிய மின்சார சட்டத்தை மத்திய அரசை உடனடியாக கைவிடக் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் விவசாயிகள் உற்பத்தியை நிறுத்தாமல் மக்களின் உயிரை காக்க தங்கள் உயிரை பணயம் வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.