திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இன்று முதல் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இன்று முதல் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், திருப்பூரில் மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 112 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் இரண்டு பேர் குணமடைந்த நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திருப்பூர் மாவட்டமும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.