கோவை: சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி சவர தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி சவர தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளை தாண்டி கடைகளை திறக்கக் கூடாது என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து சில கட்டுபாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அழகு சாதன நிலையங்கள், முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து, கோவை மாவட்ட சவர தொழிலாளர் நலசங்க உறுப்பினர்கள் கடைகளை திறக்க உடனடியாக அனுமதி அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த பின்னர் அவர் கூறுகையில், சவர தொழிலை மட்டுமே நம்பி உள்ளதாகவும் பல்வேறு கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள அரசு சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை எனவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பொருளாதார நிலையில் பின் தங்கி உள்ளவர்கள் என தெரிவித்தனர்.
மேலும், முடி திருத்தம் மூலம் ஈட்டும் வருவாயை நம்பி வாழும் தங்களது சமுதாயத்தினர் கடைகளை திறந்து தொழில் செய்திட அரசு இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.