கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தும் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தும் துண்டுகள் அணிவித்து பொதுமக்கள் மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தும் துண்டுகள் அணிவித்து பொதுமக்கள் மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாடே முடங்கி இருந்த நிலையில் இரவு பகலாக நாட்டு மக்களை பாதுகாக்க காவல்துறை, மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உழைத்து வருகின்றனர்.



இந்த நிலையில், அவர்களின் பணியை போற்றும் விதமாக தண்ணீர் பந்தல் பகுதியில் பணியாற்றும் 60 தூய்மை பணியாளர்களுக்கு மதியம் விருந்து அளித்தும், துண்டு அணிவித்து அப்பகுதி பொதுமக்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். தூய்மை பணியாளர்களும் காவலர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் எனவும் ஊரடங்கு காலத்தில் அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும் அவர்களை கொளரவிக்கும் வகையில் அவர்களுக்கு மதிய விருந்து அளித்து மரியாதை செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி நகரைச் சேர்ந்தவர் புஷ்பா மற்றும் அவரது மகள் அம்மு இருவரும் தங்களது வீட்டின் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் வசந்தா என்பவரது பாதங்களை கழுவி, பொட்டு வைத்து மலர் தூவி வணங்கி மரியாதை செய்தது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அனைவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...