திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 7,500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும், முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2000 ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பாக 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவருமான சுப்பராயன் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.