திருப்பூரில் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

திருப்பூர்: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோரை அவர்களின் சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி இன்றுதுவங்கியது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவானது, அமல்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் திருப்பூரில் இயங்கி வந்த பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து திருப்பூரிலிருந்து வந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பனியன் 

தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சம்பந்தபட்ட பனியன் நிறுவனங்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அளித்து வந்தனர். 

இருப்பினும், வட மாநில தொழிலாளர்கள் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி, கடந்த சில நாட்களாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இரயில் மற்றும் பேருந்துகள் செல்கிறது என்கிற வதந்தி பரவிய காரணத்தால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகப்படியானோர் திரண்டனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதற்கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலமாக இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோரை அவர்களின் சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி துவங்கியது.

சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பத்தவர்களில் முதற்கட்டமாக பீகாரை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டர்வகளை ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பும் பணி திருப்பூரில் நடைபெறுகிறது. பதிவு செய்யப்பட்ட நபர்களை மாவட்ட நிர்வாகம் மூலம் பேருந்துகளில் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டு, உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, உணவு , தண்ணீர் பாட்டில்கள் போன்றவை கொடுக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இவர்களில் 40க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் மாணவர்களும் செல்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...