வால்பாறை வாழைத்தோட்டம் ஆறு தூர் வாரும் பணி துவக்கம்

வால்பாறை வாழைத்தோட்டம் ஆறு தூர் வாரும் பணி துவக்கம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகரில் முக்கிய பகுதியாக உள்ளது வாழைத்தோட்டம் பகுதி. இப்பகுதியை ஒட்டி நடுமலை ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த ஆறு தூர் வாரப்படாததால் ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆற்று நீர் கரையை தாண்டி வருகிறது. இதனால் பாதிப்படையும் மக்கள் இந்த ஆற்றை தூர் வாரி ஆழப்படுத்த கோரிக்கை வைத்து வந்தனர். 

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார அனுமதி பெற்றார். இதனை ஒட்டி இன்று புதிய பேருந்து நிலையம் முன்புள்ள வாழைத்தோட்டம் ஆற்றில் தூர் வாரும் பணியினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். 

மழைக்காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர். உதவி பொறியாளர், நகராட்சி பொறியாளர் சரவணபாபு, கூட்டுறவு வங்கி தலைவர் .வால்பாறை அமீது நகர செயலாளர் மயில்கனேசன், உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...