கோவை மாநகராட்சி பகுதியில்‌ கூடுதல்‌ குடிநீர் வைப்புத்‌ தொகையாக ரூ.4000/- வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில்‌ பொது மக்களிடமிருந்து கூடுதல்‌ குடிநீர்‌ வைப்புத்‌ தொகையாக ரூ.4000/- வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மாநகராட்சி ஆணையர் அவர்கள் விளக்கம் அளித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில்‌ பொது மக்களிடமிருந்து கூடுதல்‌ குடிநீர்‌ வைப்புத்‌ தொகையாக ரூ.4000/- வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மாநகராட்சி ஆணையர் அவர்கள் விளக்கம் அளித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கடந்த 2009-ஆம்‌ ஆண்டு மேயர்‌.வெங்கடாசலம்‌ மற்றும்‌ நா.கார்த்திக்‌, சிங்காநல்லூர்‌ சட்டமன்ற உறுப்பினர், துணை மேயராக இருந்தபோது அப்போதைய மாமன்றத்தில்‌ 29.12.2009 அன்று மாமன்ற தஜா்மான எண்‌.173-ன்படி பரிந்துரைக்கப்பட்டு, ஒப்புதல்‌ வழங்கப்பட்ட தாமானத்தில்‌, வீட்டு இணைப்புகளுக்கான வைப்புத்‌ தொகை ரூ.5000/- ஆக நிர்ணயக்கப்பட்டது.

அதனடிப்படையில்‌, ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள்‌ செலுத்தியிருந்த ரூ.1000/-க்கு கூடுதலாக ரூ.4000/- , எந்தவித வலியுறுத்தலும்‌, கட்டாயமும்‌ இன்றி வைப்புத்‌ தொகையாக பெறப்பட்டு வருகிறது.

மேலும்‌, கூடுதல்‌ குடிநீர் வைப்புத்‌ தொகையான ரூ.4000/-த்தினை, ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புதாரார்கள்‌ பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்த வேண்டும்‌ என்ற தாமானத்தின்‌ அடிப்படையிலேயே தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.

தற்போது, கோவிட்19 காரணமாக மாநகராட்சிக்கு பொதுமக்கள்‌ செலுத்தப்பட வேண்டிய வரிகள்‌ மற்றும்‌ வைப்புத்‌ தொகைகள்‌ வகுலிக்கப்பட வேண்டியதனை எந்தவித கட்டாயமும்‌ இன்றி ஜீன்‌ மாதம்‌ வரை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சிங்கநல்லார்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ குறிப்பிட்டது போல்‌ மாநகராட்சி சார்பில்‌ எவ்வித வலியுறுத்தலும்‌ இல்லை, என இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌, ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவகள்‌ செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...