வால்பாறையில் தொடரும் சிறுத்தைப்புலிகள் அட்டகாசம்..! ஒரே பகுதியில் மூன்று மாடுகள் பலி

கோவை: வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கடந்த மாதம் 18ம் தேதி வாசுகி என்பவரின் மாட்டை சிறுத்தைப்புலிகள் அடித்துக் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது.

பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் மாட்டை கடந்த 26ம் தேதி மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில், அதே மாடசாமியின் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.



மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மாட்டை சிறுத்தைப் புலிகள் கொன்று தின்றது தெரியவந்தது.



தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் வனத்துறையினரால் கண்காணிப்பு கேமரா, வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து தெரியப்படுத்த எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டு உள்ளதை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் (ACF) சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...