கோவையில் மது போதையில் நண்பன் மயங்கி விழுந்தது கூட தெரியாமல் விட்டு விட்டு சென்ற நண்பன்..!

கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டதை தொடர்ந்து குடிமகன்கள் அளவு கடந்த சந்தோஷத்தில் உள்ளனர்.


கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டதை தொடர்ந்து குடிமகன்கள் அளவு கடந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

கடந்த 43 நாட்களாக மதுபான கடைகள் இல்லாததால் திண்டாடி வந்தவர்கள் இன்று கடைகள் திறந்தது முதல் கிடைத்தவரை மதுபானங்களை வாங்கி செல்ல முயல்கின்றனர்.

இந்நிலையில், தடாகம் சாலையில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. காளியாபுரம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் இருவர் மது அருந்திய பின்னர் மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர். இருவரும் வெவ்வேறு வாகனங்களில் வந்திருந்த நிலையில் ஒருவரது ஸ்கூட்டர் வாகனத்தில் மது வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இருவரும் வீட்டை நோக்கி பயணம் செய்துள்ளனர். இதில் சற்று முன்னே சென்ற நபர் பின்னால் வந்த தனது நண்பரை காணாததை கண்டு மற்ற நண்பர்களுடன் திரும்பி சென்று பார்த்தபோது வரும் வழியில் போதையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. தலையில் தண்ணீர் ஊற்றியும் போதை தெளிந்தபாடில்லை. இதனால் அங்கேயே காத்திருந்து அவர் சற்று போதை தெளிந்தவுடன் நண்பர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...