திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கதிரேசன் என்பவருக்கு சொந்தமாக ஸ்பின்னிங் மில் உள்ளது.
இந்த நிலையில், ஸ்பின்னிங் மில்லில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பரவிய தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்தது. இதில் நூல் பஞ்சுகள், இயந்திரங்கள் என தீயில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி என 3 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.