நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலடவேலி பகுதியில் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் தந்தை அமாவாசை, தாய் கண்ணம்மா ஆகியோருக்கு மங்கம்மா(19), சரண்யா(26 ) மற்றும் தம்பி திருப்பதி (16) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலடவேலி பகுதியில் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் தந்தை அமாவாசை, தாய் கண்ணம்மா ஆகியோருக்கு மங்கம்மா(19), சரண்யா(26 ) மற்றும் தம்பி திருப்பதி (16) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மங்கம்மா வீட்டின் வெளியே உள்ள கம்பியில் துணியினை காயபோட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் துணி பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் மங்கம்மா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
உடனடியாக அவரை காப்பாற்ற சென்ற சரண்யா மற்றும் தம்பி திருப்பதி காயம் ஏற்பட்ட நிலையில் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.