கோவை: கோவையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை: கோவையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்க தயாராகும் குடியை கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம் என்று முழக்கமிட்டனர்.
மேலும், கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசை கண்டிப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக துணை அமைப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் குப்பனூர் பழனிசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் கா.சம்பத், எஸ்.எம். சுதாகர், பீளமேடு இளைஞரணி துணை அமைப்பாளர் கா. சுரேஷ் குமார், பிரநீத், சக்தி, மகளிர் அணி சேர்ந்த காந்திமதி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.