கோவை: கோவையில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை அடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், ஊரடங்கு முடிவதற்கு முன்பாக மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் திமுக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.