கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பு..! கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்துள்ள தமிழக அரசு கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்து உள்ளது.


கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்துள்ள தமிழக அரசு கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்து உள்ளது.

கொரோனா என்பது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு எளிதாக பரவக்கூடியது. அதாவது தும்மல், மற்றும் இருமல் மூலமாக 20 சதவீதம் குறைவாகவும், பாதிக்கப்படும் நபர்கள் தொடும் பொருட்கள் மூலம் 80 சதவீதத்துக்கு மேல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பாதிக்கப்படும் நபர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2ம் தேதி வரை தமிழகத்தில் 711 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அரசாணையில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டு வரப்படுகிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

நகர்பகுதிகள் என்றால் அந்த தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளுக்குள் வெளி நபர்கள் செல்வதை தடுக்கவும், யாரும் வெளியே செல்வதை தடுக்கவும் தடுப்பு வைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் 28 நாட்கள் வரை கட்டுப்பாடு இருக்கும். மருத்துவ அதிகாரிகளால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும். கடைசி நோயாளி வரை பரிசோதனையில் நெகட்டிவாக இருக்க வேண்டும். நோயாளி கண்டறியப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது. அதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தான் இருக்கும். தமிழகம் முழுவதும் தற்போது வரை 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை மாவட்டத்தில் 37 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி, கே.கே.புதூர், திருமறை நகர் 1, திருமறை நகர் 2, கருப்பராயன் கோவில் வீதி, ஆடிட்டர் வீதி, அம்மன் நகர், சாய் நகர், மதுக்கரை, போத்தனூர் 1, போத்தனூர் 2, வசந்தம் நகர், தியாகராய வீதி, அன்னூர், சிரியன் சர்ச் 1, சிரியன் சர்ச் 2, மேட்டுப்பாளையம், ராமச்சந்திரா ரோடு, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 1, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 2, கஸ்தூரி கார்டன், கோவை கார்டன், PN பாளையம், கிணத்துக்கடவு, சிறுமுகை, சாவித்திரி நகர், ரோஸ் கார்டன், பரத் நகர், மீனாட்சி நகர், அம்பேத்கர் காலனி, ஜீ.எம் நகர் 1, ஜீ.எம் நகர் 2, ஜீ.எம் நகர் 3, சிஎம்சிஹெச், சிடிஎம் ஹோம், காந்திபார்க் ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...