குன்னூரில் கொரோனாவுக்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்த மகளிர் கல்லூரி மாணவர்கள்

குன்னூரில் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்த பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினருக்கு தீக்ஷா செயலி மூலமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.


நீலகிரி: குன்னூரில் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்த பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினருக்கு தீக்ஷா செயலி மூலமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினர் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு தீக்ஷா செயலி மூலமாக கோவிட்_ 19 குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு பின்னர் சமுதாய இடைவெளி , உணவு வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுபாடு ஆகியவற்றில் காவலர்களுக்கு உதவ அனுமதி பெற்றனர். தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் சிந்தியா ஜார்ஜ் வழி நடத்துதலில், கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தங்கள் சேவைகளை அளித்து வருகின்றனர்.

இது போன்ற தன்னார்வம் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகளையும், அவசர காலத்தில் தேசிய சிந்தனைகளையும், மகளிருக்கான அதிகாரத்தின் சாரத்தையும்கற்றுத்தந்துள்ளது என்று தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் வரை தங்களது தன்னார்வ தொண்டுகள் தொடரும் என உறுதியளித்தனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...