கோவை மாவட்டம் வால்பாறையில் மே 5 ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சங்க தலைவர் ஜெபராஜால், சங்க அலுவலகத்தில் சங்க கொடியேற்றப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மே 5 ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சங்க தலைவர் ஜெபராஜால், சங்க அலுவலகத்தில் சங்க கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, 70 ஆதிவாசி குடும்பங்களுக்கு மளிகை அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும், கொரானா தடுப்பு பணிகளில் களத்தில் இருந்து பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்.
வருவாய்துறையினர், நகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று மதியம் 250 பேர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உணவு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் வால்பாறை வட்டார வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், செயலாளர் ஷாஜி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாசன், நிர்வாகிகள் பேபி, ஜிபுதாமஸ், ரவி, மோகன், ராஜா, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 70 ஆதிவாசி குடும்பங்களுக்கு மளிகை அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும், கொரானா தடுப்பு பணிகளில் களத்தில் இருந்து பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்.
வருவாய்துறையினர், நகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று மதியம் 250 பேர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உணவு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் வால்பாறை வட்டார வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், செயலாளர் ஷாஜி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாசன், நிர்வாகிகள் பேபி, ஜிபுதாமஸ், ரவி, மோகன், ராஜா, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.