லகிரி: குன்னூர் நகராட்சிக்கு தமிழக அரசின் கோவிட் 19 நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட தொகுப்பினை வழங்கினார்.
நீலகிரி: குன்னூர் நகராட்சிக்கு தமிழக அரசின் கோவிட் 19 நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட தொகுப்பினை வழங்கினார்.
குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் கிருமி நாசினி அவ்வப்போது தெளித்து வருகின்றனர் துரிதமாகவும், விரைவாகவும் செயல்படும் வகையில் தமிழக அரசு கோவிட் 19 நிதியில் இருந்து ரூபாய் 12 இலட்சம் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு கொடியசைத்து துவக்கி வைத்து நகராட்சியில் பணிபுரியும் சுமார் 225 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் இது குறித்து அவர் பேசுகையில், தமிழக அரசு முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவா வண்ணம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதியில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக, இன்று குன்னூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து அரிசி, மற்றும் காய்கறி தொகுப்பை வழங்கியது மன நிறைவு அளிப்பதாக கூறினார்.