கோவை: கோவையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவை: கோவையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்னை போன்ற பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக அண்மையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டின் தொடர்பில் இருந்த அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது போன்று மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை அந்த பகுதியில் உருவாக்கியுள்ளனர்.
இதில் அந்த பகுதியில் சந்தைக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் வரைந்தும், ஒலி பெருக்கியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்றால் எவ்வாறு பொருள்கள் வாங்குவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றின் அவசியங்களை எடுத்து கூறுகின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட மாதிரி சந்தைகளில் உள்ள காய்கறிகளை அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி தொடர்ந்து கபசுர குடிநீரும் வழங்கி வருகின்றனர். சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் ஒரே பகுதி மக்கள் இலவச காய்கறிகளை வழங்கி வெளியில் சென்றால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறும் விதமாக அமைக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு மாதிரி சந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.