உணவு வேண்டாம் எங்கள் மாநிலத்துக்கு அனுப்புங்கள்..! வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களுடன் போலீசார் சமரசம் பேச்சுவார்த்தை!

கோவை: கோவையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி, உணவு வாங்க மறுத்து வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி, உணவு வாங்க மறுத்து வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் இங்கு பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இன்றி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.



கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இவர்களுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் உணவு வாங்க வந்த நூற்றுக்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள் உணவை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களுக்கு உணவு வேண்டாம், ஊருக்கு அனுப்பினால் போதும் என கூறி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும், அவர்களை அமரவைத்து இந்தி மொழி தெரிந்த பெண் காவலர் மூலம் இந்தியில் இளைஞர்களை சமரசப்படுத்தினர். வடமாநில இளைஞர்களை ஊருக்கு அனுப்ப கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு உணவினை வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...