கோவை: கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கு தளர்வினால் மாநகர காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கு தளர்வினால் மாநகர காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் அனாவசியமாக சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் 50 சதவீதம் தளர்வு ஏற்பட்டு உள்ளதால் வழக்கம் போல வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மக்களின் தேவைக்கிணங்க இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் காவல் எல்லையில் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் சரிபார்க்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியானது தனிமனித இடைவெளியை பின்பற்றி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.