கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா நிவாரண பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.
கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா நிவாரண பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை இன்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் 16 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது அதையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது மக்களுக்கு நிவாரண வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி வீட்டிலே இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் எம்.பி மகேந்திரன், வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வீ.அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.