கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.184.75 லட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் இன்று துவக்கிவைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.184.75 லட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் இன்று துவக்கிவைத்தார்.
கோவை மாநகராட்சியின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ரூ.20 இலட்சம் மதிப்பிலான ஒரு வஜ்ரா இயந்திரமும், ரூ.39.75 இலட்சம் மதிப்பிலான டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள் மூன்றும், ரூ.10 இலட்சம் மதிப்பிலான ஜாக்டோ டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள் மூன்றும், ரூ.115 இலட்சம் மதிப்பிலான ஜெட்டிங் இயந்திரங்கள் இரண்டும் ஆகமொத்தம் ரூ.184.75 இலட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்களின் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் திரு.ஆ.இலட்சுமணன் அவர்கள், நகா் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் அவர்கள், செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார் அவர்கள் மற்றும் அலுவலார்கள் கலந்து கொண்டார்கள்