கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து கள்ளு மற்றும் சாராயம் தயாரிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மே 3 ஆம் தேதி அன்று கோவை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் சோதனை நடத்தியதின் விளைவாக 45 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 22,.400 லிட்டர் சாராயம் மற்றும் 35 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198.5 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, மாவட்ட அளவில் தொடர்ந்து சோதனை நடத்தி மதுவிலக்கு தொடர்பான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.