கோவை: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டு இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் கட்டுமான பொருட்கள், கால் செண்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கபட்டு உள்ளது.
கோவை: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டு இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் கட்டுமான பொருட்கள், கால் செண்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கபட்டு உள்ளது.
கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்த நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணபட்டது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இன்று காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் சார்பில் பொதுமக்கள் சென்றுவரும் மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பேருந்து நிலைய பகுதிகள், பொதுச் சாலைகள், கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களின் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.
காலை 5 மணி முதல் 9 மணி வரை கிருமிநாசினி தெளிக்கும் பணி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.